ஸ்வப்னா சுரேஷ் 
இந்தியா

ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதி

​கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DIN


கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சாரித் பிஎஸ், சந்தீப் நாயர் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் விய்யூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ்-க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக:

கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5-ஆம் தேதி சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அந்தத் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத் துறை, சுங்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT