ராஜஸ்தானில் புதிதாக 722 பேருக்கு கரோனா
ராஜஸ்தானில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி புதிதாக 722 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி புதிதாக 722 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 722 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 91,678 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 74,821-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.