லடாக்கில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று காலை 5.47 மணியளவில் லாடாக்கின் கார்கில் பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் கார்கிலிலிருந்து வடமேற்கு திசையில் 435 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது என தெரிவித்தனர்.
மேலும், எந்த விதமான சேதங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.