இந்தியா

ராஜஸ்தான்: எல்லைத் தாண்டிவந்த 2 பேர் சுட்டுக்கொலை

DIN

ராஜஸ்தானில் போதைப்பொருள்களை கடத்த முயன்ற 2 பேரை எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மேலும் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு எல்லையை கடந்து வந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதை கண்டு அவர்களை நோக்கி பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இருவரும் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தபோது அவர்களிடம் போதைப்பொருள்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

பின்னர் ஆயுதங்களுடன் 8 கிலோ போதைப்பொருள்களையும் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். இதனால் எல்லைப் பகுதியில் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT