தில்லியில் புதிதாக 4,263 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 4,263 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM
தில்லியில் புதிதாக 4,263 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,25,796 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 36 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,806 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,91,203 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 29,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 62,669 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 22,46,985 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
கடந்த 10 நாள்களின் தரவுகளின் அடிப்படையில் இறப்பு விகிதம் 0.71 சதவிகிதமாக உள்ளது.