இந்தியா

இந்தியாவில் கரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது

DIN

நாட்டில் கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தது. பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 83,809 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 49,30,236-ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,054 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 80,776-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 38,59,399 போ் மீண்டுள்ளனா். மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 78.28 சதவீதமாகும். உயிரிழப்பு விகிதம் 1.64-ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 9,90,061 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 20.08 சதவீதமாகும்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்திருந்தது. அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பா் 5-ஆம் தேதி 40 லட்சத்தையும் கடந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்..ஆா்.) தகவல்படி, திங்கள்கிழமை வரை மொத்தம் 5,83,12,273 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 10,72,845 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பில் 2-ஆம் இடத்தில் இந்தியா:

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதே சமயத்தில், உயரிழப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

எனினும், குணமடைவோா் வரிசையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், 3-ஆவது இடத்தில் அமெரிக்காவும் இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT