முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  247 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 4:42 PM
மகாராஷ்டிரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:51 PM

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக  247 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் தொற்றால் பாதிக்கப்படும் காவலரக்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 247 காவலர்களுக்கு கரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20,003-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,728 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 16,071 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதிதாக 2 காவலர்கள் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனா தொற்றுக்கு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 204-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.