இந்தியா

ஹிமாசலில் இ-பாஸ் முறை ரத்து; சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி

DIN

ஹிமாசலப் பிரதேச மாநிலத்திற்குச் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பொதுமுடக்க தளர்வுகளில் மக்கள் இ-பாஸ் இன்றி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதன்படி, ஹிமாசலப் பிரதேசத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) முதல் மாநிலத்திற்குள், மாநிலத்திற்கு வெளியே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை எனவும் சுற்றுலாப் பயணிகளும் இ-பாஸ் இன்றி ஹிமாசல் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 10 முதல் ஹிமாசலில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT