பிட் எழுதலாம், ஆனால் காதில் கிசுகிசுப்பதை தவிர்த்துவிடுங்கள்: வெங்கையா நாயுடு
துண்டு சீட்டில் எழுதுவது தேர்வறைகளில் வேண்டுமானால் தடை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் மாநிலங்களவையில், உறுப்பினர்கள் துண்டுச் சீட்டில் எழுதி தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் வெங்
புது தில்லி: துண்டு சீட்டில் எழுதுவது தேர்வறைகளில் வேண்டுமானால் தடை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் மாநிலங்களவையில், உறுப்பினர்கள் துண்டுச் சீட்டில் எழுதி தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருவரது இருக்கைக்கு மற்றொருவர் செல்வதை தவிர்த்து விடுங்கள், வேறு ஏதேனும் அவசர தகவல் என்றால், துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து தகவலைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மாநிலங்களவை நடந்து கொண்டிருக்கும் போது, முன்பகுதிக்கு வர வேண்டாம், அதுபோலவே உறுப்பினர்களும், மற்றொரு உறுப்பினரின் இருப்பிடத்துக்குச் சென்று அவரது காதுகளில் கிசுகிசுப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
யார் யாரிடம் பேச வேண்டும் என்றாலும் துண்டுச் சீட்டைப் பயன்படுத்துங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.