முகப்பு
உலகம்

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் போர்நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்வேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 2:49 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... - AP
பகிர்:

ஈரான் போர்நிறுத்தம் கோருவதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்வேன் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முழுவதுமாக முடக்கியுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென வலியுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் புதிய தலைவர் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டுமென அமெரிக்க அரசிடம் கேட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 1) அன்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டதாவது:

“ஈரானின் புதிய தலைவர் அமெரிக்காவிடம் இப்போது போர்நிறுத்தத்தைக் கோரியுள்ளார். எப்போது ஹோர்முஸ் நீரிணை எந்தவொரு தடையுமின்றி முழுவதுமாகத் திறக்கப்படுகிறதோ அப்போது நாங்கள் பரிசீலிப்போம்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், அமெரிக்க அரசிடம் போர்நிறுத்தம் கோரியதற்கான எந்தவொரு தகவலும் ஈரான் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Trump has stated that Iran is seeking a ceasefire, and that he would consider it if the Strait of Hormuz were opened.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.