கோப்புப்படம் 
இந்தியா

ஜார்கண்ட்: ரயில்வே ஆய்வு வாகனம் மோதி யானை பலி

ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சைபாசா மாவட்டத்தில் உள்ள சிங்பும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வந்த ரயில்வே ஆய்வு வாகனம் காட்டுயானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

சரந்தா காட்டுப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் ரயில்வே ஆய்வு வாகனம்  அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று மண்டல வனத்துறை அலுவலர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்வே ஆய்வு வாகனம் சென்று யானை மீது மோதியதால், காட்டு யானை உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு யானை புதைக்கப்படும் என்றும் மண்டல வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT