முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ரோந்துப் பணியின்போது வெவ்வேறு பகுதிகளில் 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவந்திபோரா மாவட்டத்தில் ஒருவரையும், கரேவ் பகுதியில் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

பின்னர் அவர்களின் உடமையில் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →