முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 20 செப்டம்பர், 2020 at 11:22 AM
தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:53 PM

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,71,306-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு 30,573 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று  (சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 53,811 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,88,220 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 0.60 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவில் ஒப்பிடும்போது 1.60 சதவிகிதமாக உள்ளது.

தெலங்கானாவில் குணமடைவோர் விகிதம் 79.65 சதவிகிதமாக உள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.