கரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலுமே இந்தியா மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், கரோனா கட்டுப்பாடு, பொருளாதார நிலைத்தன்மை ஆகிய இரண்டுலும் உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது பொருளாதர சரிவிலிருந்து மீண்டிருக்க வேண்டும். கடந்த 41 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவின் ஜி.டி.பி. கடும் சரிவை சந்தித்துள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.