இந்தியா

தலிபான் தாக்குதலில் 9 ஆப்கன் வீரர்கள் பலி

IANS

ஆப்கானிஸ்தானின், தக்கார் மாகாணத்தில் தலிபான் நடத்திய பயங்கர தாக்குதலில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உள்பட 9 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

நவாபாத் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்து 3 காவல் அதிகாரிகள் உள்பட 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். 

மேலும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டாரின் தலைநகரான தோஹாவில் ஆப்கானிய அரசாங்கம் மற்றும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாட்டில் இத்தகைய தாக்குதலை தலிபான்கள் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT