முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 55 லட்சத்தை எட்டியது

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55.62 லட்சமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 75,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 22 செப்டம்பர், 2020 at 11:50 AM
நாட்டில் கரோனா பாதிப்பு 55 லட்சத்தை எட்டியது
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55.62 லட்சமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 75,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

இதுநாள்வரை நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55,62,664 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, 44,97,868 போ் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,053 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 88,935 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,75,861 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

Advertisement

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஒட்டுமொத்தமாக 6,53,25,779 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 9,33,185 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.