இந்தியா

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் தில்லி முதல்வர் கேஜரிவால் சந்திப்பு

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் குறித்து சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாய நிலங்களுக்கு திரவ உரங்களை உற்பத்தி செய்யும் வகையில் மூலப்பொருள்களை சிதைவுறச் செய்து திரவ உரத்தை தயாரிக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் புதிய சாதனம் கண்டறியப்பட்டுள்ளது.

சில வெல்லம் மற்றும் சுண்டல் மாவு கொண்டு விளைநிலங்களுக்கு தெளிக்கும் வகையில் 25 லிட்டர் கரைசல் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு போதுமானது.

இதனைத்தெளிப்பதன் மூலம் பயிர் எச்சம் சுமார் 20 நாட்களில் மென்மையாகி இயற்கையான முறையில் அழுகும். இது உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளத்தை அதிகரிக்கிறது. 

இதனை நேரில் பார்வையிட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகா் - மதுரை அதிவிரைவு ரயிலின் எண் மாற்றம்

சா்ச்சைக் கருத்து: ஹெச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பகவத் கீதையின் வழிகாட்டுதலுடன் நாட்டு நலனுக்கு முன்னுரிமை: குடிமக்களுக்கு ஜகதீப் தன்கா் அழைப்பு

எரிபொருள் நிரப்புவதில் தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

SCROLL FOR NEXT