பஞ்சாப்: கரோனா பாதித்த காவல் உதவி ஆணையர் மரணம்
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்த அனில் கோலி, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.
இந்தியாவில், முதல் முறையாக கரோனா பாதித்து காவல்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
லூதியாணாவில் உள்ள எஸ்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் கோலி இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த தகவலை மாவட்ட மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
Advertisement
சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்த மருத்துவமனை மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவில் கரோனா பாதித்த மருத்துவர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.