முகப்பு
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கரோனா உறுதி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2020 at 5:16 PM
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,684 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,077 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 718 ஆக உள்ளது. 

Advertisement

கடந்த 28 நாள்களில் 15 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 80 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனா பாதிப்புக்கு ஆளாக்கவில்லை. கரோனா  பரவும் இரட்டிப்பு விகித கால அளவு 7.5 நாள்களில் இருந்து 10.1 நாள்களாக அதிகரித்துள்ளது.

கரோனா மீட்பு விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ளது. மொத்தம், 4,749 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.