முகப்பு
இந்தியா

முழு ஊரடங்கு: சென்னை கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 25 ஏப்ரல், 2020 at 3:35 PM
பகிர்:


சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை முதல் ஒரு சில நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, தங்களது பகுதிகளில் நான்கு நாட்களுக்கு காய்கறி கடைகள் இருக்காது என்பதால், ஏராளமான பொதுமக்களும், இன்று அதிகமான வாடிக்கையாளர்கள் காய்கறிகளை வாங்க கடைக்கு வருவார்கள் என்பதால் ஏராளமான வியாபாரிகளும் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர்.

பொதுவாகவே இன்று காலை முதல் சென்னை உட்பட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் மாநகராட்சிகளில் இருக்கும் சந்தைகளிலும், கடைகளிலும் அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

Advertisement

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக்கிய நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு  ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் கே.  பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.