ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,200ஐ எட்டியது
ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,221 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,221 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் மட்டும் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜோத்பூரில் 370 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதைத் தொடர்ந்து, அஜ்மீர், பாரத்புர், கோடா, நாகௌர், டோங்க் பகுதிகளில் கரோனா பாதிப்பு நூறை தாண்டியுள்ளது.