முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்

தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Updated On : 28 ஏப்ரல், 2020 at 6:10 PM
பகிர்:

தில்லியில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தில்லியில் 3,108 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 877 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில், கரோனா பாதிக்கப்பட்டு தில்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிஆர்பிஎஃப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 55.

Advertisement

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,974 ஆகவும், உயிரிழப்பு 937 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.