முகப்பு
இந்தியா

மும்பையில் 3 காவலர்கள் பலி; 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்

மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 காவலர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2020 at 2:43 PM
கோப்புப் படம்
பகிர்:


மும்பை: மும்பையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 காவலர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 52 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள், அதே சமயம், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்தால், அவர்களும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

மும்பையில் நடுத்தர வயதைச் சேர்ந்த மூன்று காவலர்கள் கரோனா பாதித்து மரணம் அடைந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த உத்தரவை மும்பை காவல்துறை எடுத்துள்ளது.

Advertisement

அதேபோல மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சுமார் 12 ஆயிரம் காவலர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையும், 20 ஆயிரம் காவலர்களுக்கு சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.