முகப்பு
இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஏப்ரல், 2020 at 3:49 PM
பகிர்:


பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறந்திருக்கும் வகையில் அந்த சமயத்தில் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அந்த சமயத்தில் வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் அமரீந்தர் சிங்  அறிவித்துள்ளார்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.