கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி
கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 29 மாலை 5 மணி முதல் ஏப்ரல் 30 பகல் 12 மணி வரையிலும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் பலியாகியுள்ளனர், 223 பேர் கரோனாசிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,050 ஆகவும், பலி எண்ணிக்கை 1,074 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 8,325 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.