முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் மேலும் 18 பேருக்கு தொற்று; பாதிப்பு 329 ஆக உயர்வு!

ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 30 ஏப்ரல், 2020 at 4:42 PM
பகிர்:

ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை  மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஹரியாணாவில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 18 பேரில் 11 பேர் ஜாஜர் பகுதியைச் சேர்த்தவர்கள். பரிதாபத்தில் நால்வரும், குருகிராமில் மூவரும் அடங்குவர். ஒட்டுமொத்த மாநில  பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட 206 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.