முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,610 ஆக அதிகரிப்பு; 8,373 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 30 ஏப்ரல், 2020 at 5:54 PM
பகிர்:

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை  33,050-ல் இருந்து 33,610 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074-ல் இருந்து 1,075 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர். 

நாட்டில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 9,915 பேரும்,  குஜராத்தில்  4,082 பேரும், தில்லியில் 3,439 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,660 பேரும், ராஜஸ்தானில் 2,438 பேரும், தமிழகத்தில் 2,162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.