வடகிழக்கு மாநிலங்களை அச்சுறுத்தாத கரோனா தொற்று: தற்போதைய நிலவரம்
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
புது தில்லி: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 60 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
அஸ்ஸாம் - 41
மணிப்பூர் - 2
திரிபுரா - 2
அருணாசலம் - 1
மிசோரம் - 1
நாகாலாந்து - 1
மேகாலயம் - 12
Advertisement
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 24 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.