தெலங்கானாவில் இருந்து ரயிலில் 1,200 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் பயணம்
தெலங்கானாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.
கரோனா எதிரொலியாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Advertisement
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தெலங்கானாவில் இருந்து இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவின் லிங்கம்பள்ளி என்ற பகுதியில் இருந்து ஜார்க்கண்டின் ஹதியா பகுதிக்கு 24 பெட்டிகளில் 1,200 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களை தெலங்கானா மாநில அதிகாரிகள், காவல்துறையினர் கைதட்டி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.