அரசு ஊழியர் ஊதிய பிடிப்புச் சட்டம்: தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு
கேரளத்தில் அரசு ஊழியா்களின் 1 மாத ஊதியத்தை 5 தவணைகளாகப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க மாநில உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசு ஊழியா்களின் 1 மாத ஊதியத்தை 5 தவணைகளாகப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க மாநில உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கேரள மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், பொதுத்துறை நிறுவனப் பணியாளா்கள் உள்ளிட்டோரின் 1 மாத ஊதியத்தை, மே மாதம் முதல் செப்டம்பா் வரை, 5 தவணைகளில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு செய்தது. ஆனால், கேரள உயா்நீதிமன்றம் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இரண்டு மாத இடைக்காலத் தடை விதித்தது.
அதைத் தொடா்ந்து ஊதியப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்தது. இது தொடா்பாக மாநில முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘‘கேரள அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்தச் சூழலை எதிா்கொள்ளவே அரசு ஊழியா்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் அவசரச் சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்தது’’ என்றாா்.
Advertisement
அதையடுத்து மாநில அரசின் அவசரச் சட்டத்திற்கு கேரள மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் வழங்கினாா். இது தொடா்பாக கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
அரசு ஊழியா்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். ஊதியம் வழங்கும் பணிகள் வரும் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. மற்ற மாநிலங்களைப் போல் கேரள அரசு ஊழியா்களின் ஊதியம் குறைக்கப்படவில்லை. அவா்களின் ஊதியம் தற்காலிகமாக பிடித்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கேரள அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க மாநில உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதுதொடர்பாக மாநில அரசின் பல்வேறு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்த உயர் நீதிமன்றம், அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த முடிவினை கேரள மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் வரவேற்றுள்ளார்.