முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2020 at 12:31 PM
ஒடிசாவில் புதிதாக 3,053 பேருக்கு கரோனா; மேலும் 17 பேர் பலி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:00 PM

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,949 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,276-ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 27,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 1,70,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சனிக்கிழமையான நேற்று மட்டும் 51,623 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 32,05,249 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,163-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 0.58 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவுடன் ஒப்பிடும்போது 1.6 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.