முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 430 பேர் கரோனாவுக்கு பலி

​மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 26 செப்டம்பர், 2020 at 8:34 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,419 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,21,176 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 23,644 பேர் குணமடைந்துள்ளனர், 430 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,16,450 பேர் குணமடைந்துள்ளனர், 35,191 பேர் பலியாகியுள்ளனர். 2,69,119 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் 2.66 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 20.74 சதவிகிதமாக உள்ளது. 19,45,758 பேர் வீடுகளிலும், 30,571 பேர் கரோனா மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.