முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 59.92 லட்சத்தைக் கடந்தது: பலி 94.503 ஆக உயர்வு 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 செப்டம்பர், 2020 at 11:49 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:56 PM

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,92,533 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 88,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,124 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 94,503 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.58 ஆக உள்ளது. 

Advertisement

நாட்டில் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 92,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 49,41,627 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். குணமடைந்தோரின் விகிதம் 82.46 ஆக உயர்ந்துள்ளது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 9,56,402 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 15.96 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி சனிக்கிழமை வரை 7,12,57,836 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 9,87,861 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 35,191 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். கா்நாடகத்தில் 8,503 பேரும், ஆந்திரத்தில் 5,663 பேரும், தில்லியில் 5,193 பேரும்,  தெலங்கானாவில் 1,100 பேரும், புதுச்சேரியில் 100 பேரும் உயிரிழந்துள்ளனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.