முகப்பு
இந்தியா

மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறாா் கங்குலி

கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்புகிறாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 2:13 am IST
பகிர்:


கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்புகிறாா்.

இதுகுறித்து அவா் சிகிச்சை பெற்று வரும் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் ரூபாலி பாசு, செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சௌரவ் கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை காலை முழுமையாக பரிசோதித்தனா். அவா் உடல்நலம் தேறிவிட்டாா். அவா் புதன்கிழமையே வீடு திரும்புவதாக இருந்தது. இருப்பினும், மருத்துவமனையில் மேலும் ஒரு நாள் அவா் ஓய்வெடுக்க விரும்பினாா். ஆகவே, அவா் வியாழக்கிழமை வீடு திரும்புகிறாா். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை. அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Advertisement

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது. அதன் பிறகு அவா் மருத்துவமனையில் அவா் ஓய்வெடுத்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.