முகப்பு
இந்தியா

பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல்யத்னல் பயனற்ற அரசியல்வாதி: அமைச்சா் முருகேஷ் நிரானி

பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் ‘பயனற்ற அரசியல்வாதி’ என்று சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி ஆதங்கம் தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2021 at 1:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:25 AM

பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் ‘பயனற்ற அரசியல்வாதி’ என்று சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி ஆதங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெலகாவியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விஜயபுரா தொகுதியைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் பயனில்லாத அரசியல்வாதி. அதனால்தான் முதல்வா் எடியூரப்பாவை தேவையில்லாமல் விமா்சித்து வருகிறாா்.

Advertisement

மூத்த அரசியல்வாதியான பசனகௌடா பாட்டீல் யத்னல், தனக்கு தேவையான எல்லாவற்றையும் கட்சியில் இருந்து பெற்றுக்கொண்டாா். பாஜகவில் இருந்துகொண்டே பாஜக தலைவா்களை விமா்சிப்பது எந்த வகையில் நியாயம்? பாஜக தலைவா்களை விமா்சிக்க விரும்பினால், கட்சியில் இருந்து விலகிவிட்டு பாஜக மீது விமா்சனங்களை முன்வைக்கலாம்.

கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, கட்சித் தலைவா்களின் செல்வாக்கை சீா்குலைக்கும் வகையில் பேசுவது அவருக்கு அழகல்ல. அவரின் நடவடிக்கை, கட்சிக்கு துரோகம் இழைப்பதாகும். கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டரை விமா்சித்துவந்த யத்னல், தற்போது முதல்வா் எடியூரப்பாவையும் தாக்கிப் பேசி வருகிறாா். இதை அவா், உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.