முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 57,074 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 57,074 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 57,074 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக 57,074 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 30,10,597 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 222 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 25.22.823 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 55,878 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 55,878 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரத்தில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் மற்றும் இரவு நேரங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments