அதிகரிக்கும் கரோனா தொற்று: பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தியாஅதிகரிக்கும் கரோனா தொற்று: பிரதமர் மோடி ஆலோசனை
கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிகரித்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93 ஆயிரத்து 249 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குரிப்பிடத்தக்கது.