காரில் தனியாக சென்றாலும் முகக்கவசம் கட்டாயம்: தில்லி நீதிமன்றம்
தில்லியில் தனியாக காரில் சென்றாலும் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் தனியாக காரில் சென்றாலும் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது இடத்தில் பயன்படுத்தக்கூடிய வாகனம் என்பதால் அதில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கரோனா பரவலைத் தடுக்க தில்லியில் ஒவ்வொரு தனி நபரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.