இந்தியா

தில்லியில் மேலும் 7,437 பேருக்கு கரோனா தொற்று

DIN

தில்லியில் புதிதாக 7,437 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,98,005 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,687 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 6,63,667பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,157 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 23,181 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 91,770 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 8.10 சதவிகிதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT