20 மருத்துவர்கள், 6 மாணவர்களுக்கு கரோனா: எய்ம்ஸ் தகவல்
நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரம், ஒடிசா, ஜார்க்கண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதில் முன்களப் பணியாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
Advertisement
நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு மருத்துவ மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த 6 மாணவர்களில் மூன்று பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது.