சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம் நீடிக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிக தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
Advertisement
திருமா ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளார். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமா பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 6 அன்று முடிவடையும் நிலையில் தற்போது வரை அவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்துக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமா போட்டியிடாதது பற்றி விசிக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், இதுபற்றிய அறிவிப்பை திருமா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
எனவே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவுக்கு பதிலாக விசிக மாநில அமைப்புச் செயலர் இளமாறன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.