FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்

திமுக, அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பெருவாரியாக விஜய் பெறுவார் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

விஜய் | திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

திமுக, அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளைப் பெருவாரியாக தவெக தலைவர் விஜய் பெறுவார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, "திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான கருத்துகள் நீண்ட காலமாகவே அரசியல் களத்தில் இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன.

இந்த எதிர்ப்பு வாக்குகளை, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது தோன்றிய மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக் கொண்ட கட்சிகள் பெற்றுக் கொண்டன.

Advertisement

Advertisement

இந்த முறையில் திமுக கூட்டணியை எதிர்த்து, அதிமுக கூட்டணி, விஜய் தலைமையிலான கட்சி, சீமான் தலைமையிலான கட்சி என அனைவருக்கும் திமுக எதிர்ப்பு என்பதுதான் முதன்மையான அரசியல்.

இவர்கள் மூவரும் அவர்களின் சக்திக்கேற்ப, இந்த எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து கொள்வார்கள்.

புதிதாக களம்காண்கிற தமிழக வெற்றிக் கழகமானது, திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பெருவாரியாகப் பிரித்துக் கொள்ளவிருக்கிறார்.

ஆனால், தனித்த ஆளாக அவர் (விஜய்), திமுக கூட்டணியையோ அதிமுக கூட்டணியையோ பின்னுக்குத் தள்ளி, ஆட்சியைக் கைப்பற்றுமளவுக்கு அவர் வலிமை பெறவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை.

ஆகையால், எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், திமுக வெற்றி பெறும்; திமுக கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

summary

TVK Vijay does not possess the strength to capture power single-handedly, says VCK Leader Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments