அதிகரித்துவரும் கரோனா தொற்றால் தில்லியில் பள்ளிகளை மூட உத்தரவு
தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு மாநிலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தலைநகர் தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது சுட்டுரைப் பதிவில் அறிவித்துள்ளார்.
தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.