முகப்பு
இந்தியா

கரோனா மூன்றாவது அலை: பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி
பகிர்:

கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 

அதன்படி, பாகிஸ்தானில் கரோனா மூன்றாவது அலை எழுந்துள்ளதால், தொற்று மீண்டும் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது.

ஒரேநாளில் 105 பேர் பலியாகியுள்ளதையடுத்து, நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 15,299 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  7,10,829 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் 69,811 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →