அஸ்ஸாம்: 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு
அஸ்ஸாம் மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தலைமை தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த தலைமை தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் தலைமை தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
அஸ்ஸாமில் ரதபாரி, சோனாய் மற்றும் ஹஃப்லாங் சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும்.
Advertisement
இந்த மூன்று சட்டப் பேரவை தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியன்று தோ்தல் நடைபெற்றது. ரதபாரி (எஸ்சி) தொகுதிகுள்பட்ட இந்திரா எம் வி பள்ளி 149-ஆவது வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) பாஜக வேட்பாளரின் மனைவிக்கு சொந்தமான காரில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.