இந்தியா

நாக்பூர் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

PTI

நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். 

நகரின் வாடி பகுதியில் அமைந்துள்ள நான்கு அடுக்குள்ள வெல் ட்ரீட் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வசதி இல்லாத நிலையில், 31 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவர்களில் 10 பேர் ஐசியு பிரிவிலிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தானது சரியாக இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உயிரிழந்தவர்கள் தீ விபத்தினால் மரணம் அடைந்தார்களா என்பது குறித்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் தெளிவாகத் தெரியும் என்று நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ்குமார் கூறியுள்ளார். 

இந்த தீ விபத்து சம்பவத்தில் 44 வயது பெண், 69 வயது ஆண் உள்பட நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT