மங்களூருவில் இரவு ஊரடங்கு மீறல்: 68 வாகனங்கள் பறிமுதல்
மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூருவிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே வாகன ஓட்டிகள் தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டதால், இருசக்கரங்கள் உள்பட 68 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நகரத்தின் வெவ்வேறு இடங்களில் 45 சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். இரவு 10 மணிக்குப் பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரத்தில் உள்ள பார்கள், உணவகங்கள் இரவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்காணித்து வருவதாக நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.