கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும்: சண்டீகர் நிர்வாகம்
கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்கம் பொருளாதாரத்தை முடக்குகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே பொதுமுடக்கம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும். தொடர்ந்து கரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் பொதுமுடக்கம் விதிக்கப்படும் என்று சண்டீகர் நிர்வாகத்தின் ஆலோசகர் மனோஜ் பரிடா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
நகரத்தில் கரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே ஏப்ரல் 7 முதல் இரவு 10 மணியிலிருந்து, காலை 5 மணி வரை இரவு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 20 ஆகக் குறைந்தது. ஆனால், தற்போது 350-400 ஆக உயர்ந்துள்ளது. சண்டீகரில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதனால் கரோனா பரவுவதைத் தடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சண்டீகரில் திங்கள் நிலவரப்படி 424 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் 31,167 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.