முகப்பு
இந்தியா

உ.பி. முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்டார் யோகி

உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"எனது அலுவலகத்தில் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்."

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சிலநாள்களாக கரோனா தொற்று பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் அங்கு புதிதாக 18,021 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 95,980 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments