மேற்குவங்க பாஜக தலைவரின் பிரசாரத்திற்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் 
இந்தியா

மேற்குவங்க பாஜக தலைவரின் பிரசாரத்திற்கு 2 நாள் தடை

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்காவிற்கு 2 நாள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜக தலைவர் ராகுல் சின்காவிற்கு 2 நாள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் 44 தொகுதிகளுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது மத்திய சிஐஎஸ்எப் ஊழியர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். 

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா, குறைந்தது 8 பேர் மீதாவது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த ராகுல் சின்கா மீது நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. 

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஏப்ரல் 15) மதியம் 12 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து ராகுல் சின்காவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT